ஐ படத்தின் சக்சஸ் பார்ட்டியில், விஜய் கலந்துகொண்டுள்ளதன் மூலம், ஷங்கரின் அடுத்த படத்தில் ( பீகே ரீமேக்) விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், ஏமி ஜாக்சன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஐ படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்தது. படம், ரூ. 100 கோடி வசூல் செய்தது.
இதனை உற்சாகமாக கொண்டாடும் பொருட்டு, டைரக்டர் ஷங்கர், விக்ரம், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், சக்சஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த சக்சஸ் பார்ட்டியில், ஷங்கர் மற்றும் விக்ரம் தங்களது குடும்பத்தினர்களோடு கலந்துகொண்டனர். இந்த பார்ட்டியின்போது, விக்ரமும், ஷங்கரும் மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பான நிகழ்வாக, நடிகர் விஜய்யும் கலந்துகொண்டது தான். அவரும், ஐ படக்குழுவினர்களோடு ஆடிப்பாடி, தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
பாலிவுட்டில் வசூலில் சாதனை படைத்த பீகே படத்தை, தமிழில் ரீமேக் செய்ய ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் அமீர் கான் கேரக்டரில் விஜய் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ஐ சக்சஸ் பார்ட்டியில், நடிகர் விஜய்யும் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.