Thursday, June 30, 2016

ஆகஸ்ட்டில் துவங்குகிறது கமலின் அடுத்த ஆக்ஷ்ன் படம்



கமல்ஹாசனுக்கு ஒரு காலத்தில் சந்தானபாரதி ஆல் இன் ஆலாக இருந்தார். அதன் காரணமாகவே அவருக்கு அவ்வப்போது தான் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பையும் வழங்கினார் கமல். அன்றைய சந்தானபாரதியின் இடத்தை தற்போது நிரப்பியவர் ராஜேஷ் எம்.செல்வா. பல வருடங்களாக கமலிடம் உதவியாளராக இருந்த இவரை 'தூங்காவனம்' படத்தில் இயக்குநராக்கினார் கமல்.

அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. எனவே சோர்ந்துபோன ராஜேஷ் எம்.செல்வாவை அழைத்த கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் எக்ஸிக்யூட்டீவ் புரொட்யூஸராக பணிபுரிய வைத்தார். கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்சில் நடந்து முடிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை கமல்ஹாசனே இயக்கி வருகிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிந்து விடும். 'சபாஷ் நாயுடு' படத்தை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜேஷ் எம்.செல்வா. ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ள இப்படம் ஆக்ஷ்ன் பாணியில் உருவாகவிருக்கிறதாம்.

Tuesday, November 24, 2015

அடுத்த வருட தீபாவளிக்கு விஜய் 60

'புலி' படத்திற்கு ஏற்பட்ட தோல்வியினால் தற்போது அட்லி இயக்கும் தாறு மாறு படத்தை வெற்றியடைய வைத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறாராம் விஜய்.

அதனால், அவசரஅடியாக படத்தை எடுக்காமல் நிதானமாக எடுக்கும்படி அட்லீயிடம் சொல்லி இருக்கிறார் விஜய். எனவே தற்போது நடித்துவரும் தாறுமாறு படத்தின் வேலைகள் முடிய அடுத்த ஆண்டு பிப்ரவரி ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. 

படத்தை 2016 ஏப்ரல் 14 அன்று வெளியிட உள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய். 

துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாராம் காஜல் அகர்வால்.  விஜய் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். 

இந்தப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல்முறையாக இணைவிருக்கிறாராம் சந்தோஷ் நாராயணன். பிரவீன் கே.எல். எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள  'விஜய் 60' படத்தின் துவக்கவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுமாம். 

அன்றைய தினமே  படப்பிடிப்பையும் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் 60 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Thursday, October 29, 2015

பாட்ஷாவுக்கு இணையாக கபாலி ரஜினி

ரஜினி டான் வேடத்தில் நடித்து வரும் படம் கபாலி. இந்த படத்தில் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த ரவுடி கபாலியின் வேடத்தில் ரஜினி நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

ஆரம்பத்தில் சாதாரண ரவுடியாக இருக்கும் ரஜினி பின்னர் பெரிய டானாக வளர்ந்து மக்களுக்கு நன்மை செய்வது, அவர்களை பல பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவதுதான் இப்படத்தின் கதையாம்.

அந்த வகையில், இப்படத்தில் அவர் சென்னையில் நடிக்க வேண்டிய காட்சிகளை இங்கு செட் போட்டு படமாக்கினர். அப்போது ஒரு காட்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் தீ விபத்தில் சிக்கி விடுவார்களாம். 

அவர்களை உயிருடன் காப்பாற்றும் காட்சியில் ரஜினி நடித்தாராம். அந்த ஒரே காட்சியை சுமார் ஒரு வாரம் படமாக்கினாராம் டைரக்டர் ரஞ்சித்.

அதேபோல், பிழைப்புத்தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் ஏழை மக்களை ஒரு கும்பல் சிறை பிடித்துக்கொள்ளும் காட்சியும் இப்படத்தில் உள்ளதாம். 

அவர்களை ரஜினி சென்று மீட்டு வருவது போன்ற காட்சிகள் தற்போது மலேசியாவில் படமாக்கப்படுகிறதாம். 

மேலும், இந்த படத்தில் ஆரம்பகால ரஜினியை நினைவுபடுத்தும் வகையில், அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ள ரஜினி, சில காட்சிகளில் பாட்ஷாவுக்கு இணையாக ஆவேச நடிப்பையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாராம்.

Tuesday, October 27, 2015

நானும் ரவுடித்தான் - விமர்சனம்

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அவருடன் தற்போது அப்படி, இப்படி பேசப்படும் இயக்குனர் விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்துள்ள திரைப்படம், முன்னணி இளம் நடிகர் தனுஷ் தயாரிக்க, வளரும் இளம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம்.

முதலில் இப்பட இசையமைப்பாளர் அனிருத் ஹீரோவாக அறிமுகமாக இருந்த திரைப்படம், இது நாள் வரை நாயகராக மட்டும் தான் நடிப்பேன்... என அடம் பிடித்திருந்து வந்த இயக்குனர் பார்த்திபனை வில்லன் ஆக்கியுள்ள படம்... என ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வந்திருக்கும் படம் தான் நானும் ரவுடிதான்.

பாண்டிச்சேரி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகாவின் செல்லமகன் விஜய் சேதுபதி, சின்ன வயதில் அம்மாவுடன் அடிக்கடி ஸ்டேஷனுக்கு வந்து போய் லாக்கப்பில் ரெஸ்ட் எடுத்து வளர்ந்த சேதுபதிக்கு, அங்கு வரும் ரவுடிகளைப் பார்த்து, வளர்ந்து பெரியவன் ஆனதும் ரவுடி ஆக வேண்டும் என்பது ஆசை. 

ஆனால் பிள்ளையை பெரிய போலீஸ் ஆபிஸர் ஆக்க வேண்டுமென்பது அவரது அம்மா ராதிகா சரத்தின் லட்சியம்.  

அம்மாவின் செல்வாக்கில் போலீஸ்ஆவதற்கு முன், லோக்கல் ரவுடியாக தன்னை காட்டிக் கொள்ள முயலும் விஜய் சேதுபதிக்கு நயன்தாராவை, ஒரு முறை தன் அம்மாவின் ஸ்டேஷனில் வைத்து யதேச்சையாக பார்த்ததும் காதல் தொற்றிக் கொள்கிறது.

அதனால், தன் செல்போனை கைத்தவறி உடைத்து விட்டு மனம் உடைந்து காணப்படும் செவித்திறன் குறைபாடுள்ள நயனுக்கு உதவுவது போல், அவர் பின்னால் சுற்றும் விஜய் சேதுபதி, நயனின் சோகக்கதையைக் கேட்டு மெர்சலாகிறார்.  

ஒரு நல்ல அமைதியான போலீஸ் ஆபிஸரான நயனின் அப்பாவிற்கு வந்த வெடிகுண்டு பார்சலில், நயன்தாரா, தன் அம்மாவை இழந்து, தன் இரண்டு காதுகளின் கேட்கும் தன்மையையும் இழக்கிறார். 

கொஞ்ச காலத்தில் தன் காவலர் தந்தையையும், இழந்து தனி மரமாக இருக்கும் நயனுக்கு, தன் பெற்றோரின் சாவுக்கும் தனது காதுகள் கேட்காது போனதற்கும் காரணம், முன்பு பாண்டியிலும்,  தற்போது சென்னையிலும் கோலோச்சி வரும்  தாதா பார்த்திபன் என்பது தெரிய வருகிறது.

பார்த்திபனை பழி தீர்க்க சரியான ஆஜானுபாகுவான ரவுடி, நயனுக்கு வேண்டி இருக்கிறார். அந்த சமயம் விஜய் சேதுபதி வலிய வந்து நயன்தாரா மீதான தன் காதலை  மெல்ல, மெல்ல காட்ட, தன் இந்த நிலைக்கு காரணமான பார்த்திபனை தீர்த்து கட்ட தனக்கு உதவினால் விஜய் சேதுபதியை தான் காதலிப்பதாக உறுதி கொடுக்கிறார். அப்போதைக்கு விஜய் விரும்பும் உதடுகொடுக்க உஷாராய் மறுக்கிறார்.

வடிவேலு காமெடி பாணியில், நானும் ரவுடிதான், ரவுடிதான்.... எல்லோரும் பார்த்துக்கங்க.... பார்த்துக்குங்க... என., பள்ளிக்கூட பசங்க காதல், மோதல் பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் மட்டுமே தலையிட்டு பெரிதாய் ரவுடி பில்டப் மட்டும் கொடுத்து வரும் சாதா விஜய் சேதுபதி, பெரிய ரவுடி தாதாவான பார்த்திபனை கொன்றிட  நயனுக்கு உதவினாரா? அல்லது விஜய் சேதுபதியே நயனின் சோகக்கதை, சொந்தக் கதைக் கேட்ட பின்,  வெறிகொண்ட வேங்கையாக புறப்பட்டு பார்த்தியை தீர்த்தாரா ..? அல்லது அவரது மம்மி ராதிகாவின் ஆசைப்படி போலீஸ் ஆனாரா..? நயனுடனான காதலில் தோற்றாரா.? வென்றாரா..?  என்பதை பின்பாதி நீள, நீள... சொல்கிறது நானும் ரவுடிதான்  படத்தின் மீதிக் கதை!

பாண்டியாக நானும் ரவுடிதான் என்றபடி வரும் விஜய் சேதுபதி, நான் கடவுள் ராஜேந்திரன் சொல்வது மாதிரி ரவுடிக்கே உரிய நடை, உடை, பாவனைகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நெஞ்சில் ரவுடி தனத்திற்குரிய துணிவு இல்லாமல் அவர் ஆரம்பத்தில் படும் அவஸ்தைகள் காமெடி கலாட்டாக்கள்!

காதல் பற்றியும், நட்பு பற்றியும் நயன்தாராவை தவறாக வழிநடத்த முற்படும் தனது அன்வர் எனும் நன்பருக்கு வழங்கும் லக்சர், நண்பனின் காதலியை லவட்ட முற்படும் நம்பிக்கை துரோகிகளுக்கு, நற்போதனை.  நானும் ரவுடி என அவர்  தன் போலீஸ் இன்ஸ்  அம்மா இருக்கும் தைரியத்தில் ஆரம்பத்தில் அவர் பண்ணும் லொள்ளு  செம ரகளை. 

நயன் மீதான காதலுக்காக, இவர் ஏங்குவதும் அது கிட்டத்தில் கிடைத்தும், கிடைக்காமல் போனதும் இவர் பார்த்திபனை கொள்ள காமெடி வடிவேலு பாணியில் எதையும் பிளான்  பண்ணி பண்ணனும் ... என்பது மாதிரி சொதப்பல் பிளான்களில் இறங்குவதும், அதன் பின் ஒருவழியாக காதலிக்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்த்திபனை அட்டாக் பண்ண கிளம்புவதும் ஹாஸ்யம். அம்மாவை  மா என்று கூட  கூப்பிடாமல் மம்மி என்பதின் சுருக்கமாக மீ,மீ ... என்று ஏதோ மலையாளிகள் மாதிரி சேதுபதி, படம் முழுக்க ராதிகாவை அழைப்பது... தமிழனாய், ரசிகனை சற்றே கடுப்பேற்றுகிறது.

காதம்பரி -நயன்தாரா செவித்திறன் குறைபாடுள்ள அழகுப்பெண்ணாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தான், செவித்திறன் குறைபாடுள்ளவர் என்பதை யாரிடமும் சொல்லாதீர் என எதிர்படும் எல்லோரிடமும் நயனனே சொல்வது...., இது மாதிரி குறைபாடுள்ளவர்கள்... 

எப்படி அந்த குறைப்பாட்டை காட்டிக் கொள்ளாமல் காலம் தள்ள முயற்சிப்பார்களோ, அதை அப்பட்டமாக, அழகாக பிரதிபலித்திருக்கிறார் நயன்.  நயன்தாராவைத் தவிர இன்றைய தமிழ் சினிமாவில் இது மாதிரி கணமான பாத்திரத்தை வேறு யாரும் சிறப்பாக செய்ய முடியுமா...? என்பது  சந்தேகமே! இந்தப் படத்தில் அவரது சொந்த குரலும் கூடுதல் ப்ளஸ்!

அதே நேரம், அவ்வளவு நாள் பார்த்திபனை பழி தீர்க்க வெறியுடன் காத்திருந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் தன் பெற்றோர் மரணத்திற்கு காரணமான பார்த்திபனை தன் காதலன் சேதுபதி பிடித்துக் கொள்ள, நயன் கத்தியால் குத்த நல் வாய்ப்பு நச்சென்று கிடைத்தும், பார்த்தியை குத்தாமல் சித்தாந்தம் பேசுவது... 

இந்த படத்தில் நயன் ஏற்றிருக்கும் பாத்திரத்தையே கேள்வி குறியாக்கி, கேலிகுரிய தாக்கி விடுகிறது.  அதே போன்று தன் பெற்றோர் சாவுக்கும், தன் செவித்திறன் போனதற்கும் ஒரு ரவுடிதான் காரணம் என்பது தெரிந்திருந்தும்... ஒரு சீனில் விஜய் சேதுபதியிடம்  ரவுடி வேற, ப்ராடு வேற.... நீ ப்ராடு. ரவுடிகள்  எல்லோரும் நல்லவர்கள் , நேர்மையாளர்கள் ..என லக்சர் கொடுப்பது ரொம்பவும் சினிமாட்டிக்காக, லாஜிக் இல்லாமல் அபத்தமாக இருக்கிறது .

கிள்ளிவளவன் எனும் வளவள  பார்த்திபனின் வில்லத்தனத்தில் கள்ளத்தாமான சில்மிஷங்கள் தான் நிரம்பி  இருப்பதாக தெரிகிறது. நயன், தேடி வந்து அவரை போட வேண்டும் ... என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் என்ன ரவுடி சார், இவர்? என சலிப்பாய் கேட்க வைத்து விடுகிறார். 

அதே மாதிரி, பக்கம் பக்கமாய் எந்த ரவுடி பேசுவான்? என எக்குத்தப்பாய் கேட்க வைக்கும் பார்த்தி, ஒரு சீனில் எதிராளிகளை பாத்தி கட்டி, சுத்தி சுத்தி அடிப்பது மட்டும் ரசனை. மற்றபடி பார்த்திபன் வரும் சீன்கள் சோதனை மேல் சோதனை! எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று மல்லுகட்டும் ரவுடிகளை பார்த்திருக்கிறோம்... இப்பட வில்லன் -பார்த்திபன் வாயிலாக ஒரு மாஸான ரவுடி எக்கச்சக்க எதிராளிகளைப் பார்த்ததும் கக்கூஸில் ஒளிவதை இந்தப் படத்ததில் தான் பார்க்க முடிகிறது... ம்!

பார்த்திபனும் ஒரு கிரியேட்டர், டைரக்டர் ... ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்ததும் இப்பட டைரக்டரிடம் இதுபற்றி டிஸ்கஸ் ஏதும் செய்திடாமல், சமீபத்திய நா.ர. தான்  பிரஸ்மீட்டில் தானே வலிய சொன்னது மாதிரி நயனையும், இப்பட இயக்குனரையுமே வைத்த கண் வாங்காமல் கண்காணித்துக் கொண்டிருந்திருப்பாரோ .?! என அலுப்பு தட்ட வைத்து விடுகிறார் மனிதர்.

ஆனால், பார்த்திபன் மாதிரி அல்லாமல், கொலை பாதக ரவுடியான பார்த்தியை, அரசியலில் எதிர்க்கும் மன்சூர்., சைலண்டாக தன் பாணி நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல். மன்சூர் மாதிரியே, பத்து லட்சம் பார்த்து பதறும் பாண்டி, பழைய தாதா ஆனந்தராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்டவர்களும் படத்திற்கும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் வலு சேர்த்துள்ளனர்.

சேதுபதியின் நண்பராக வரும் ரேடியோ ஜாக்கி பாலாஜி, "அசராப் புலி, அசால்ட்டு புலி .. ஏன்னா இது சாதாபுலி அல்ல ... பாகுபலி ... என்பது உள்ளிட்ட  டைமிங்  காமெடி டயலாக்குகளில் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். 

அவரை மாதிரியே சேதுபதியின் பிற சகாக்களான தாத்தா ராகுல், அன்வர், காமாட்சி ஆகியோரும் பாண்டிச்சேரி சாதா விஜய் சேதுபதிக்கு தாதா பயிற்சி தரும் நார்த் மெட்ராஸ் ரவுடி நான் கடவுள் ராஜேந்திரன் - உள்ளிட்டோரும்  விஜய் சேதுபதியின் மீ  யாக வரும் போலீஸ் மம்மி ராதிகா சரத்தும் கச்சிதம் .

அனிருத்தின் மெலடி, அதிரடி.... என வகைக்கு ஒன்றாக வசீகரிக்கும் நானும் ரவுடி தான்... படப்பாடல்கள் இசையும், அதிரும் பின்னணி இசையும், இப்படத்திற்கு பெரிய பலம்.  "ஜார்ஜ.C. வில்லியம்ஸின் ஒளிப்பதிவும்., ஸ்ரீகர் பிரசாத்தின் முன்பாதி படத்தின் படத்தொகுப்பும் கூட நானும் ரவுடிதான் படத்திற்கு கூடுதல் பலமே !

விக்னேஷ்சிவனின் எழுத்து, இயக்கத்தில் , ஒரு நண்பனின் காதலில் ஊடல்... என்றால் ,  உடன் இருப்பவர்கள் உதவி பண்ண முடியலை... என்றாலும்  உபத்திரம் பண்ற மாதிரி  ஊடால புகுந்து காதலியை களவாட, கண்டபடி வழி நடத்த முயற்சிக்க கூடாது...எனும் ரீதியில் விஜய் சேதுபதி பேசுவது மாதிரியான  பன்ச் டயலாக்கில் இயக்குனர், யாருக்கோ, எதற்கோ தன்னிலை விளக்கம் தர முற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. 

வலிய வைக்கப்பட்டிருக்கும் அந்த வசனம், வந்து போகட்டும்.. பரவாயில்லை ... ஆனால், நயன், தன் பெற்றோரின் சாவுக்கு காரணமானது ஒரு ரவுடி என தெரிந்தும், தன் மீதுள்ள காதலால் நானும் ரவுடி தான் ....என பில்டப் கொடுத்து பிராடு பண்ணும் விஜய் சேதுபதியிடம், ரவுடிகள் நல்லவர்கள், நேர்மையாளர்கள்.... என பேசுவதும், பார்த்திபன் வகையாக நயன் கையில் கிடைத்தும்  தன் விருப்பப்படி, பார்த்தியை போடாமல், கழிவிறக்கத்தில் அவருக்கு உயிர் பயம் கூட காட்டாமல் விடுவதும், லாஜிக்காக இடிப்பதை  இயக்குனர் கவனிக்கத் தவறியிருப்பது பலவீனம் .

அதே மாதிரி, பாண்டிச்சேரி அரசாங்கத்தை சார்ந்த மாஹி பகுதியில் இருந்து மீண்டும் மாற்றலாகி பாண்டிக்கு வரும் நயனின் போலீஸ் அப்பா அழகம்பெருமாள் பாண்டி  மண்ணுக்கு மட்டும் தான், சரக்கு மணம் உண்டென்று சிலேகித்து பேசுவதும், உடனே மகள் நயன்தாரா வண்டியை நிறுத்த சொல்லி ஒயின்ஷாப்பில் அப்பாவுக்கு இரண்டு பீர் கொடுங்க... என வாங்குவதும் கொடுமை! 

நாம் கொடுமை என்பது நயன்,அப்பாவுக்காக பீர் வாங்குவதை அல்ல .... பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த மாஹி , காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ்நாட்டை காட்டிலும்  சரக்கு ரொம்பவும் கம்மி விலையில் கிடைக்கும், பாண்டச்சேரியின் வாசம் அப்பகுதிகளிலும் பக்காவாக வீசும்  எனும் போது, பார்க்காததை பார்த்த மாதிரி நாக்கை தொங்க போடும் பெருமாளின் (அழகம்) பெருமூச்சும், அதற்கு நயன்தாராவின் பீர் வாங்கும் ரியாக்ஷனும் ., இயக்குனரின் அறியாமையை காட்டுவதாகவே இருக்கிறது . 

இது மாதிரி ஒரு சில குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பாரகாமல் , கேஷுவலாக பார்த்தோமென்றால் ., சிம்பு நடிப்பில்  போடா போடி "படத்தை முதன்முதலாக இயக்கிய விக்னேஷ் சிவன்,  தனுஷ் தயாரிப்பில், இயக்கி இருக்கும், "நானும் ரவுடிதான்  ஜனரஞ்சகமான லவ் ,காமெடி , ஆக்ஷன் அதிரி- புதிரி அட்டகாசம் தான் ..

ஆகமொத்தத்தில், "நானும் ரவுடிதான் - ரசிகனுக்கு பிடித்த நல்ல  படம்தான்!"

Friday, October 23, 2015

5 மில்லியனை தொடப் போகும் வேதாளம் டீசர்

தீபாவளிக்கு இன்னும் பதினைந்து நாட்களே உள்ள நிலையில் தீபாவளி தினத்தன்று வரும் படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. 

'தூங்காவனம், வேதாளம்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளதால் இந்த இரண்டு படங்களுக்கிடையேதான் போட்டி நிலவும். அதிலும் 'வேதாளம்' படம் அஜித் ரசிகர்களால் அதிகமாகவே கொண்டாடப்பட்டுவிடும். 

'வேதாளம்' தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றுதான் கோலிவுட்டில் ஒரு தகவல் உலா வருகிறது. 'தூங்காவனம்' படம் தீபாவளியன்றுதான் திரைக்கு வர உள்ளது, அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றே சொல்கிறார்கள்.

இதனிடையே 'வேதாளம்' படத்தின் டிரைலரை அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக இன்னும் சில தினங்களில் 'வேதாளம்' டிரைலர் வெளியாகும் என்று தெரிகிறது. 

'வேதாளம்' டீசர் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு வாரத்திலேயே இந்த டீசர் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இந்த டீசர் யு டியூபில் 5 மில்லியன் பார்வையாளர் கணக்கைத் தொட இருக்கிறது. இன்னும் 50000 பேர் பார்வையிட்டால் அந்த சாதனையை 'வேதாளம்' டீசர் நிகழ்த்திவிடும். 

'வேதாளம்' டிரைலர் வெளிவந்தால் அது டீசரின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Wednesday, October 14, 2015

மெல்லிசை படம் விஜய்சேதுபதிக்கு பிரேக்காக அமையுமா?



ஹீரோவாக வெற்றியடைவது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதிலும் எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து போராடி ஜெயிப்பது மிகப்பெரிய விஷயம். 

அப்படி வெற்றியடைந்தவர்களில் சிலர் தனக்குக் கிடைத்த நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். இந்தப்பட்டியலில் விஜய்சேதுபதியும் சேர்ந்தவிடுவாரோ என்று தோன்றுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய்சேதுபதி அடுத்தடுத்து வித்தியாசமான படங்களில் நடித்து பேர் வாங்கினார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் தோல்வியடைந்து வருகின்றன. 

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஆரஞ்சுமிட்டாய் படம் சரித்திரம் காணாத தோல்வியை சந்தித்தது. பல தியேட்டர்களில் போதிய பார்வையாளர்கள் இல்லாத காரணத்தினால் காட்சிகளே ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழலில் அவர் நடித்த இடம்பொருள் ஏவல் படம் வெளிவராமலே முடங்கிக்கிடக்கிறது. முடங்கிக் கிடந்த மற்றொரு படமான மெல்லிசை படத்தை எப்படியாவது வெளியிட முயற்சி செய்து வருகின்றனர். 

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இரண்டு பாடல்காட்சிகளை திரையிட்டனர். திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் இனிமையாக இருந்தாலும் கமர்ஷியலாக இல்லை என்று விமர்சனம் பரவலாக எழுந்தது. 

மெல்லிசை படம் விஜய்சேதுபதிக்கு பிரேக்காக அமையும் என்ற நம்பிக்கையில் கீறல் விழுந்துள்ளது.

Monday, October 5, 2015

நயன்தாரவை கடத்தலிலிருந்து காப்பாற்றும் விஜய்சேதுபதி

ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவின் தொகுப்பாளர், மேடையேறிய விஜய் சேதுபதியிடம் "இங்கு வந்திருக்கிற நடிகைகளில் ஒருவரை கடத்தச் சொன்னால் யாரை கடத்துவீர்கள்?" என்று கேட்டார். 

அதற்கு விஜய்சேதுபதி பளிச்சென்று சொன்ன பதில் "நயன்தாரா". அதைக் கேட்டு வெட்கத்தால் சிரித்த நயன்தாரா மனதுக்குள் அந்த நிமிடமே இடம் பிடித்து விட்டார் விஜய் சேதுபதி. 

அடுத்த சில மாதங்களுக்குள் அந்த மாயம் நடந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தனுஷ் தயாரிக்கும், ''நானும் ரவுடிதான்'' படத்தில் நயன்தாராவின் ஜோடி விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்கு முன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாரா. தனுஷின் நட்புக்காக உடன் நடிக்கும் நடிகர் யார் என்று கூட கேட்காமல் ஒப்புக் கொண்டார். 

ரவுடி கேரக்டர் ஆனாலும் பார்க்க நல்லவராக தெரியணும் யாரை நடிக்க வைக்கலாம் என்று சிலரை இயக்குருதும் தயாரிப்பாளரும், யோசித்தபோது விஜய்சேதுபதி என்று பளிச்சென்று கருத்து சொன்னார் நயன்தாரா, பீட்சா, சூதுகவ்வும் படங்களில் அவர் நெகட்டிவ் கேரக்டர்தான் பண்ணினார் ஆனால் யாருக்குமே அவர் கோபம் வரவில்லை. என்று அதற்கு விளக்கமும் சொல்ல உடனே டிக் அடிக்கப்பட்டார் விஜய்சேதுபதி.  இப்போது மொத்த படமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

கதைப்படி படத்தின் நாயகி நயன்தாராவுக்கு ஒரு பிரச்னை. அவரை கடத்த ஒரு கும்பல் திட்டமிடுகிறது. தனியயொ பெண்ணால் அவர்களை எதிர்த்து போராட முடியாது. போலீசுக்கு போனால் விஷயம் திசை திரும்பிவிடும். போலீசும் கிரிமினல்களும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று சொல்ல முடியாது. 

மீடியா, செய்தி, பப்ளிசிட்டி என்று வெளியில் தலைகாட்ட முடியாது. இதனால் நண்பர் ஒருவர் உதவியுடன் சென்னையில் இருக்கிற ஒரு டெரரான ரவுடியை தேர்வு செய்கிறார். அவர்தான் விஜய்சேதுபதி. தனக்கான பிரச்சனையை அவரிடம் கூறி தப்பிக்க வைத்தால் இவ்வளவு பணம் தருகிறேன். என்கிறார் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 

நயன்தாராவுக்கு பாதுகாப்பு அரணாகிறார் விஜய்சேதுபதி. செவித்திறன் குறைந்த நயன்தாரா மற்றவர்களின் மவுத் ரீடிங்கை கவனித்து பேசக்கூடியவர். இதனால் ரவுடியாக இருந்த விஜய்சேதுபதி அவர் மீது காதல் கொள்கிறார். கடைசிவரை அவருக்கு காவலாக இருக்க விரும்புகிறார். 

தன் சம்பளமாக அவரையே கேட்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? நயன்தாராவுக்கு என்னதான் பிரச்சினை. விஜய்சேதுபதி உண்மையில் ரவுடிதானா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிளிக்கும் படம்.