Friday, January 23, 2015

ஒரே நேரத்தில் ஐந்து படங்கள்

இயக்குனர் லிங்குசாமி, அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பாளர்களாக இருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. 

“உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல், ரஜினி முருகன், ரா ரா ராஜசேகர், நான்தான் சிவா” ஆகிய ஐந்து படங்களை ஒரே நேரத்தில் அவர்கள் தயாரித்து வருவது தமிழ்த் திரையுலகில் ஆச்சரியமான ஒரு விஷயம்தான். 

கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் முதல் புதுமுக நடிகர்கள் வரை அவர்கள் அந்த ஐந்து படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் 'உத்தம வில்லன், இடம் பொருள் ஏவல்' ஆகிய படங்கள் முடிவடைந்து வெளிவருவதற்குத் தயாராக உள்ளன. 

'உத்தம வில்லன்' படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்க கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், பாலசந்தர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 'இடம் பொருள் ஏவல்' படத்தை சீனு ராமசாமி இயக்க விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ்  மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

'ரஜினி முருகன்' படத்தை பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'ரா ரா ராஜசேகர்' படத்தை பாலாஜி சக்திவேல் இயக்க, லிங்குசாமியின் அண்ணன் மருமகன் மதி நாயகனாக நடிக்கிறார். 

ஷகிதா பானு நாயகியாக நடிக்கிறார். நான்தான் சிவா' படத்தை ஆர். பன்னீர் செல்வம் இயக்க லிங்குசாமியின் அண்ணன்  மகன் வினோத் நாயகனாக நடிக்கிறகார். 

இந்த ஐந்து படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளது.