Tuesday, September 29, 2015

முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் கமல்



உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து இன்றைய இளம் நடிகர்களையே ஆச்சர்யப்பட வைத்து கொண்டிருக்கிறார் 60வது இளமை கதாநாயகன் கமல்ஹாசன். 

ஒரு படத்தை முடித்த அடுத்த சில தினங்களிலேயே தனது அடுத்தபடத்தில் நடிக்க தொடங்கி முன்பை விட ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார்.

 பாபநாசம் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், தூங்காவனம் படத்தில் நடித்தவர், அந்தப்படத்தை முடித்துவிட்டார். தற்போது தூங்காவனம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தூங்காவனம் படத்தை முடித்த கையோடு சத்தமில்லாமல் அடுத்தபடத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார் கமல். 

இதை அவரது புதிய தோற்றமே சொல்கிறது. தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான சீகட்டி ராஜ்யம் படத்தின் பிரஸ்மீட்டில் பங்கேற்ற கமல், முறுக்கு மீசையுடன் தோன்றினார். 

கமலின் இந்ததோற்றம் கிட்டத்தட்ட தேவர் மகன் பட லுக் போன்று தோன்றுகிறது. கமலின் அடுத்தப்படத்தையும் தூங்காவனம் ராஜேஷ் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 23, 2015

புலி படத்துக்கு தடைகோரி வழக்கு

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள புலி படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார், சிபு, பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளனர். 

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகிற அக்டோபர் 1ந் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியைச் சேர்ந் அன்பு ராஜசேகர் என்பவர் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கி, விஜய் நடித்த கத்தி படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

இந்த வழக்கு தஞ்சை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பு செல்வராஜ் மேலும் ஒரு வழக்கு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் "கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் விஜய் நடித்துள்ள புலி படம் வெளிவர உள்ளது. 

விஜய்யும் வழக்கில் உள்ள நிலையில் வரவிருக்கும் புலி படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ஆகியவற்றை வழக்கு முடியும் வரை வெளிவர தடைவிதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார். 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த மனுமீது விளக்கம் அளிக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைத்ததது.

Monday, September 21, 2015

முதன்முறையாக விளம்பர படத்தில் நடிக்கிறார் கமல்

கமல் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது. களத்தூர் கண்ணம்மா தொடங்கி, பாபநாசம் வரை சுமார் 200 படங்களில் நடித்துவிட்டார். இதுநாள் வரை ஒரு விளம்பர படத்தில்(வர்த்தகம்) கூட நடித்ததில்லை கமல். 

விழிப்புணர் தொடர்பான விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பல முன்னணி நிறுவனங்கள், கமலை நடிக்க கேட்டும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். 

ஆனால் இப்போது முதன்முறையாக ஒரு விளம்பர படத்தில் கமல் நடிக்க இருக்கிறார் கமல். இதற்கான படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது. 

இந்த விளம்பர படத்தை 5 ஸ்டார், அறிந்தும் அறியாமலும், ஆட்டோகிராப், சரவணா உள்ளிட்ட பல படங்களில் நடித்த கிருஷ்ணா இயக்க இருக்கிறார். 

Sunday, September 20, 2015

எந்திரன் 2 முதல்கட்ட வேலைகளை தொடங்கிய ஷங்கர்

ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் என பல தரமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். பிரமாண்டத்துக்கு பேர் போன அவர், ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் என்ற இரண்டு மெகா படங்களை இயக்கினார். 

அதையடுத்து, விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கினார். அந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சென்னைக்கு வரவைத்தும் பரபரப்பு கூட்டினார்.

இந்த நிலையில், ஷங்கரின் அடுத்த படத்தில் நடிப்பது யார்? அது என்ன படம்? என்பது குறித்து அவர்தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

ஆனால், அடுத்து அவர் மூன்றாவது முறையாக மீண்டும் ரஜினியுடன் எந்திரன்-2 படம் மூலம் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டு வந்தன. ஆனால் அப்படி வந்து கொண்டிருந்தபோதே, கபாலியில் ரஜினி நடிக்கும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டன.

ஆனால், தற்போது எந்திரன்-2 படத்தை எந்திரனை விடவும் பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டிருக்கும் ஷங்கர், அப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகளில் தற்போது இறங்கி விட்டார். 

இதற்காக சில ஹாலிவுட் டெக்னீசியன்கள் மற்றும் அனிமேஷன் டெக்னீசியன்களுடன் அவர் முதல்கட்ட வேலைகளை தொடங்கியிருக்கிறார். ஆக, கபாலி படத்துக்கு 60 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ள ரஜினி, அந்த படத்தை இந்த ஆண்டுக்குள் முடித்து விடுவார் என்று தெரிகிறது. 

அதனால், எந்திரன்-2 படத்தின் அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியிடப்பட்டு, ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் கசிந்துள்ளன.

Friday, September 18, 2015

36 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்த கமல் பட டிலைர்

கமலஹாசனின் தூங்காவனம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், மது ஷாலினி, சோமசுந்தரம், சந்தானபாரதி, உமா ரியாஸ்கான் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கி இருக்கிறார். 

கமலின் திரைக்கதையில் உருவாகி இருக்கும் தூங்காவனம் படத்தில் கிஷோர், பிரகாஷ்ராஜ் இரவரும் வில்லன்களாக நடித்துள்ளதாக தகவல். 10 வயது மகனுக்கு தந்தையாக வந்த கமல், என் மகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் உங்களை தொலைத்து விடுவேன் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. 

நான் சொன்னா அதை செய்வேன் என்று பேசும் பஞ்ச் டயலாக்கும் இருக்கிறது.
தூங்காவனம் டிரெய்லரில், பப் ஒன்றில் வில்லன்களுடன் கமல் மோதும் காட்சிகள் ஆவேசமாக இருந்தன. நேற்றைய முன்தினம்தான் தூங்காவனம் டிரெய்லர் வெளியானது.

அதற்குள் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூங்காவனம் டிரெய்லர் வெளியான 36 மணி நேரத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 494 பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். 8035 பேர் அதற்கு லைக் கொடுத்துள்ளனர். 282 பேருக்கு டிரெய்லர் பிடிக்கவில்லையாம்.

அதேசமயம், தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான சீக்கட்டி ராஜ்யம் படத்தின் டிரெய்லரை 168542 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

Monday, September 14, 2015

வெற்றிக்காகக் காத்திருக்கும் விஜய் சேதுபதி

2012ம் ஆண்டு 'பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஆகிய இரண்டு படங்களின் வெற்றி மூலம் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார் விஜய் சேதுபதி. 

அடுத்து 2013ம் ஆண்டில் வெளிவந்த 'சூது கவ்வும்' படமும் வெற்றிகரமாக அமைய விஜய் சேதுபதியின் இமேஜ் அப்படியே வானுயர உயர்ந்தது. அதற்கடுத்து வந்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்களை அள்ளிக் கொடுத்தது. 

அதன் பின் யார் கண் பட்டதோ தெரியவில்லை, தொடர்ந்து சறுக்கிக் கொண்டேயிருக்கிறார் விஜய் சேதுபதி.

கடந்த ஆண்டில் வெளிவந்த “ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம்”, இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த “புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய்'' ஆகிய ஐந்து படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து அவருடைய வெற்றிப் பயணத்திற்கு தடைக் கற்களாக அமைந்தன. 

ஆனால், விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவர இருக்கும் ஒவ்வொரு படங்களும் மீண்டும் அவரை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் அளவிற்கு உருவாகி வருவதாக அந்தப் படங்களின் இயக்குனர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். 

“நானும் ரெளடிதான், இடம் பொருள் ஏவல், மெல்லிசை, நலன் குமாரசாமியின் படம், இறைவி” ஆகிய படங்கள் விஜய் சேதுபதிக்கு நம்பிக்கை தரும் படங்களாகவே இருக்கின்றன. 

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'மெல்லிசை' படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. இனி, விஜய்சேதுபதி மெல்ல மெல்ல மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம். 

Friday, September 11, 2015

திசை மாறிய லிங்கா விவகாரம் - சிக்கலில் விஷால்

லிங்கா  நஷ்டஈடு தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்துக்கும் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கும் இடையில் பிரச்சனை எற்பட்டது. 

இந்த விவகாரத்தில் பாயும்புலி படத்துக்கு ரெட் போடுவதாக தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிக்க, அதைக் கண்டிக்கும் வகையில் இனி படங்களை ரிலீஸ் பண்ண மாட்டோம் என ஸ்டிரைக் அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம்.  

அடுத்த சில நாட்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாயும் புலி படம் வெளியானது. அந்தப் படத்துக்கு ரெட் போடுவதாக சொல்லப்பட்ட செங்கல்பட்டு ஏரியாவிலும் பாயும் புலி பல தியேட்டர்களில் வெளியானது. 

என்ன அதிசயம் நடந்தது? ரகசியமாக நடைபெற்ற பேரமும், பெரும் தொகை கைமாறியதுதான் காரணம் என்கிறார்கள் படத்துறையினர். லிங்கா  நஷ்டஈடாக தியேட்டர் அதிபர்கள் கேட்ட சில கோடிகளை வேந்தர் மூவிஸ் கொடுக்க மறுத்துவிட்டது.

இதனால்  பாயும் புலி படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமல்போய்விடுமோ என பதறிப்போன விஷால், அந்த பணத்தை தானே தருவதாக தியேட்டர் அதிபர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். 

அதாவது அந்த பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை உடனே தருவதாகவும், பாக்கியை பாயும் புலி வெளியாகி மூன்று நாட்கள் கழித்து  அதாவது 06.09.2015 அன்று தருவதாகவும் சொல்லி இருக்கிறார் விஷால். 

அவர் சொன்ன டீலுக்கு தியேட்டர் அதிபர்கள் ஓகே சொன்ன அதன் பிறகே பாயும் புலி ரிலீஸ் ஆகி இருக்கிறது. விஷால் சொன்னபடியே  திங்கள்கிழமை பாக்கி ரூபாயை வசூலிக்க ஒரு தியேட்டர் அதிபரை அனுப்பி வைத்துள்ளனர்.  

பாயும்புலி படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பதால் அப்செட்டில் இருந்த விஷால், தன்னால் இப்போதைக்கு அப்பணம் தர முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதன் காரணமாக விஷாலின் அடுத்த படத்துக்கு இப்போதே சிக்கல் ஆரம்பமாகிவிட்டது...!