Sunday, March 29, 2015

காமெடியனை கைவிட்ட விஜய்

பேரரசு இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடித்த படம் திருப்பாச்சி. இந்த படத்தில் விஜய்யின் நண்பனாக காமெடி ரோலில் நடித்திருந்தவர் பெஞ்சமின். 

அதற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தபோதும் திருப்பாச்சி படத்தில் படம் முழுக்க விஜய்யுடன் நடிக்கும் காட்சியில் நடித்ததால் அடுத்து இவர் பெரிய காமெடியனாகும் நிலை இருந்தது.

ஆனால், பின்னர் அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களே கிடைக்கவில்லை. அதனால் சில சின்ன படங்களில் நடித்த பெஞ்சமின் மார்க்கெட்டில் இருந்தே காணாமல் போய் விட்டார். 

அதையடுத்து, விஜய்யை சந்தித்தும் தனக்கு சான்ஸ் தருமாறு கேட்டாராம். ஆனால், அவரோ, நான் நடிக்கும் படங்களில் யார் யார் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே டைரக்டர்கள்தான். 

நான் அதில் தலையிடுவதே இல்லை. அதனால் என்னை வைத்து படமெடுக்கும் டைரக்டர்களை சந்தித்து நீங்களே கேளுங்கள். கதைக்கு ஓகே என்றால் அவர்கள் சான்ஸ் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டாராம்.

அதையடுத்து, பெஞ்சமின் விஜய் நடித்த படங்களில் நடிக்க முயற்சி எடுத்திருக்கிறார் ஆனால் யாரும் கைகொடுக்கவில்லையாம். அதனால் இப்போதும் சில சிறிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பெஞ்சமின், ஓஹோ என்றொரு படத்தில் தனி காமெடியனாக நடித்துள்ளார். 

தன்னை கோலிவுட் டைரக்டர்கள் திரும்பிப்பார்க்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான காமெடி சீன்களை யோசித்து நடித்துள்ளாராம். அதனால் இந்த ஓஹோ படத்திற்கு பிறகு எனது நடிப்பையும் ஆஹா ஓஹோ என்று பேசுவார்கள் என்று கூறி வருகிறார் பெஞ்சமின்.