Wednesday, March 11, 2015

ரஜினி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய கோரி வழக்கு

ரஜினிகாந்த் நடிப்பில், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரது நடிப்பில், கடந்த டிசம்பர் 12ம் தேதி வௌியான படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 

இப்படம் ரிலீஸால் கடந்த சில மாதங்களாக பிரச்னைகள் நிலவி வருகிறது. குறிப்பாக இப்படத்தால் தங்களுக்கு ரூ.31 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இப்பிரச்னை தொடர்பாக உண்ணாவிரத போராட்டங்கள் எல்லாம் நடந்தது. இதற்கிடையே லிங்கா படம் தொடர்பாக தன்னையும், ரஜினிகாந்தையும் விமர்சிக்க கூடாது என்று கூறி கர்நாடக கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார் ராக்லைன் வெங்கடேஷ்.

இந்நிலையில், லிங்கா படத்திற்கு கேளிக்கை வரி பெற்றது தொடர்பாக அரசுக்கு ரூ.21 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ரஜினி மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சிங்கார வடிவேலன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கை நாளைக்கு(மார்ச் 12ம் தேதி) ஒத்தி வைத்தார்.