Wednesday, March 18, 2015

போலீஸ் ரோல் - ஜிம்முக்கு செல்லும் விஜய்சேதுபதி



ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்பதை பெரும்பாலான ஹீரோக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த விஷயத்தில் விஜய்சேதுபதி விதிவிலக்கு. 

நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய்சேதுபதி. எனவே நண்பர்கள் தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தால் அதை தட்டமுடியாமல் கால்ஷீட் கொடுத்துவிடுகிறார். இதன் காரணமாக, நிறைய படங்களில் நடிக்கும் நடிகராக மாறிவிட்டார் விஜய்சேதுபதி. 

தற்போது இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய், மெல்லிசை, நானும் ரௌடிதான், இறைவி, கைநீளம் ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இவை தவிர புஷ்கர் காயத்ரி, கோகுல் இயக்கத்தில் நடிக்கவும் தலையாட்டி இருக்கிறார். 

இவற்றோடு பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநரான அருண்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்சேதுபதி. 

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டராம் விஜய்சேதுபதிக்கு. தற்போது கொஞ்சம் தொப்பையுடன் காணப்படும் விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதால் தினமும் ஜிம்முக்கு சென்று தீவிரமாக வொர்க்அவுட் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.