வேலியில் போன ஓணானை மீண்டும் எடுத்து வேட்டியில் போட்டு கொள்கிறாரே... என்று கவலைப்பட்டதோடு, இது பற்றி நயன்தாராவிடமே கேட்க...
சிம்பு கூட மறுபடி நடிக்கிறதால மீண்டும் எங்களுக்குள் லவ் வரும்னு நினைக்காதே. அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை! எனக்கு சிம்புவும் ஒண்ணுதான்...! சிவகார்த்திகேயனும் ஒண்ணுதான்..! என்று அப்போது செம நக்கலாக பதில் சொன்னாராம் நயன்தாரா.
நயன்தாரா சொன்ன இந்த நக்கல் பதில், அப்படியே வெளியே பரவி...கடைசியில் சிம்புவின் காதுக்கே போய்விட்டது.
என்னை சிவகார்த்திகேயனுடன் கம்பேர் பண்ணிட்டாளே..! என்று அப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருக்கிறார் சிம்பு. ஆனாலும் தன் வருத்தத்தை நயன்தாராவிடம் காட்டிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், அன்று நயன்தாரா அடித்த கமெண்ட் விரைவில் நனவாக இருக்கிறது. யெஸ்..சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் நயன்தாரா.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தான் நடிக்க விரும்புவதாக நயன்தாராவே ஒரு பிரபல இயக்குநரிடம் வாய் திறந்து சொல்லி இருக்கிறார்.
அவர் அப்படி சொன்னதை அடுத்து, படு வேகமாக ஒரு ப்ராஜக்ட் தயாராகி வருகிறது.
இந்த விஷயம் எல்லாம் சிம்புவுக்குத் தெரிய வந்ததால்தான் இது நம்ம ஆளு படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேறு படத்துக்குப் போய்விட்டாராம்.