Friday, April 11, 2014

ஐரோப்பிய நாடுகளில் படமான அர்ஜூனின், ஜெய்ஹிந்த்-2

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதி ,இயக்கி, தயாரித்து, நடிக்கும் படம் ஜெய்ஹிந்த்-2. கதாநாயகியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .

இன்னொரு நடிகையாக சிம்ரன்கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமாகிறார். 

இவர்களுடன் ராகுல்தேவ் , பிரம்மானந்தம், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி ,மனோபாலா, வினய்பிரசாத், நரசிம்ம ராஜு, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், அமீத்திவாரி, பேபி யுனிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒரு நாடு வல்லரசு நாடாக மாறவேண்டுமானால் பணபலம், படைபலம் ஆகியவற்றை மீறின ஒரு விஷயம் என்னவாக இருக்கும் என்றால் கல்விதான். 

நல்ல அறிவாளிகள் இருந்தால் நாட்டை மேம்பட வளர செய்வார்கள் என்கிற கருத்தை மையப்படுத்தி ஜெய்ஹிந்த் - 2 படத்தை உருவாக்கி வருகிறோம். 

சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் நானும் கதாநாயகி சிம்ரன் கபூரும் பங்கேற்ற சேசிங் காட்சிகள் ஹைவே ரோட்டில் படமாக்கினோம் படு திரில்லிங்கான காட்சிகள் படமாக்கப்பட்டது. ஸ்டன்ட் கலைஞர்ககளுடன்.

சிங்கப்பூரில் “கார்டன் பை தி வே” என்ற இடத்தில் “இவன் யார்? இவன் நெருப்பானவன்” என்ற பாடல் காட்சியில் நானும் சிம்ரன்கபூரும் பங்கேற்க படமாக்கினோம். 

உலகத்தில் உள்ள எல்லா விதமான மரம், செடி, கொடிகள் அனைத்தும் ஒரே இடத்தில் வளர்க்கிற இடம். இங்கு இதுவரை யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பதும் இந்த பாடலின் சிறப்பம்சம். 

படத்தின் 95 சதவீதம் படப்பிடிப்பு முடிந்தது .இன்னும் இரண்டு பாடல்காட்சிகள் தான் பாக்கி. விரைவில் படத்தை திரையிட உள்ளோம் என்கிறார் அர்ஜுன்.