மதுரையில் புகழ்பெற்ற குளிர்பான பெயர் கொண்ட படம் தள்ளிப்போனதில் படத்தோட இயக்குனரும், புத்தரின் பூர்வாசிரம பெயர் கொண்ட ஹீரோவும் செம கடுப்புல இருக்காங்களாம்.
இதுதொடர்பாக இரண்டு பேரும் அவுங்கவுங்க சங்கத்துல முறையிட்டாங்களாம். "ஒரு படத்தை எப்போ ரிலீஸ் பண்ணணுங்றது அந்த தயாரிப்பாளரோட உரிமை அதுல நாங்க தலையிட முடியாது"ன்னு இரண்டு சங்கத்துலேயும் கை விரிச்சிட்டாங்களாம்.
அதனால பட ரிலீசப்போ புரமோசன் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறதுன்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணியிருக்காங்களாம். தனக்காக படத்தை தள்ளி வைத்த தயாரிப்பாளருக்காக ஹீரோ, இயக்குனர் இரண்டு பேர்கிட்டேயும் ஒல்லிபிச்சான் நடிகர் சமாதானம் பேசி வருகிறாராம்.