Sunday, July 20, 2014

வாலு படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா டயலாக்கை புகுத்திய சிம்பு

சிம்பு நடித்த படங்களில் கெளதம்மேனன் இயக்கத்தில் அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா முக்கியமான படம். 

வழக்கமான காதல் கதைதான் என்றாலும், அதை கெளதம்மேனன் சொன்ன விதம் புதுமையாக இருந்தது. இன்றைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் அவரது ஸ்கிரிப்ட் இருந்தது. 

கூடவே அதுவரை தான் நடிக்கும் படங்களை எந்த இயக்குனர்கள் இயக்கினாலும், தனது பாணியையும் கலந்தே நடித்து வந்த சிம்பு, அந்த படத்தில்தான் டைரக்டரின் நடிகராக மாறி நடித்திருந்தார். அதனால்தான் அதில் வேறு மாதிரியான சிம்புவை காண முடிந்தது.

கெளதம் மேனனைப்போலவே அந்த படத்திற்கு பிறகு சிம்புவுக்கும் பெரிய ஹிட்டாக அதற்கடுத்து எந்த படமும் அமையவில்லை. அதனால், தனது நடிப்பில் இரண்டு வருடங்களுக்குப்பிறகு வெளியாகும் வாலு படத்தைதான் தற்போது பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறார் சிம்பு. அதோடு. இந்த படம் தனக்கு இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா படமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார் அவர்.

அதனால், அப்படத்தில் தான் பயன்படுத்திய சில டயலாக்குகளையும் இந்த படத்தில் சில இடங்களில் பிரயோசித்துள்ளாராம் சிம்பு. 

குறிப்பாக, ஒரு காட்சியில், நாம நண்பர்களாகவே இருந்திடலாமா? என்று காதலை முறித்துக்கொள்வதற்காக சிம்புவிடம் கூறுவார் த்ரிஷா. அப்போது சிம்பு செம டென்சனை காட்டுவார். அதையடுத்து, சிம்புவைப்பார்த்து த்ரிஷா, ஐ ஹேட் யூ என்ற வசனத்தை பேசிவிட்டு நகருவார். அதற்கு சிம்பு தேங்க்யூ என்பார்.

அதேபோல், இப்போது வாலு படத்தில் ஒரு காரசாரமான காதல் மோதல் காட்சி உள்ளதாம். அந்த காட்சியிலும் சிம்புவைப்பார்த்து ஹன்சிகா, ஐ ஹேட் யூ என்பாராம். அதற்கு சிம்பு தேங்க்யூ என்று பதில் கொடுப்பாராம். 

இதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நினைவுபடுத்தும் வகையில் வாலு படத்தில் ஆங்காங்கே காட்சிகளும், வசனங்களும் எட்டிப்பார்க்கிறதாம்.