Friday, July 18, 2014

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறார் ரஜினி

லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டது. 

அங்கேயே லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பரான கன்னட நடிகர் அம்பரீஷ் செய்து கொடுத்திருந்தார். 

படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில் அங்குள்ள சில அமைப்புகள் ரஜினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. எனவே கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது லிங்கா படக்குழு.

தற்போது ஆந்திராவில் தங்கு தடையில்லாமல் லிங்கு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இன்னும் சில நாட்களில் லிங்கா படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு சென்னை திரும்புகிறது யூனிட். 

சென்னை திரும்பியதும் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை எடிட் பண்ணி பார்க்க திட்டமிட்டு உள்ளனர். அதன் பிறகே அடுத்த கட்ட படப்பிடிப்பை முடிவு செய்ய இருக்கிறாராம் ரஜினி. 

லிங்கா படத்தை தனது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம்.