Wednesday, October 14, 2015

மெல்லிசை படம் விஜய்சேதுபதிக்கு பிரேக்காக அமையுமா?



ஹீரோவாக வெற்றியடைவது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதிலும் எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து போராடி ஜெயிப்பது மிகப்பெரிய விஷயம். 

அப்படி வெற்றியடைந்தவர்களில் சிலர் தனக்குக் கிடைத்த நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். இந்தப்பட்டியலில் விஜய்சேதுபதியும் சேர்ந்தவிடுவாரோ என்று தோன்றுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய்சேதுபதி அடுத்தடுத்து வித்தியாசமான படங்களில் நடித்து பேர் வாங்கினார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் தோல்வியடைந்து வருகின்றன. 

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஆரஞ்சுமிட்டாய் படம் சரித்திரம் காணாத தோல்வியை சந்தித்தது. பல தியேட்டர்களில் போதிய பார்வையாளர்கள் இல்லாத காரணத்தினால் காட்சிகளே ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழலில் அவர் நடித்த இடம்பொருள் ஏவல் படம் வெளிவராமலே முடங்கிக்கிடக்கிறது. முடங்கிக் கிடந்த மற்றொரு படமான மெல்லிசை படத்தை எப்படியாவது வெளியிட முயற்சி செய்து வருகின்றனர். 

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இரண்டு பாடல்காட்சிகளை திரையிட்டனர். திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் இனிமையாக இருந்தாலும் கமர்ஷியலாக இல்லை என்று விமர்சனம் பரவலாக எழுந்தது. 

மெல்லிசை படம் விஜய்சேதுபதிக்கு பிரேக்காக அமையும் என்ற நம்பிக்கையில் கீறல் விழுந்துள்ளது.