Monday, October 5, 2015

நயன்தாரவை கடத்தலிலிருந்து காப்பாற்றும் விஜய்சேதுபதி

ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவின் தொகுப்பாளர், மேடையேறிய விஜய் சேதுபதியிடம் "இங்கு வந்திருக்கிற நடிகைகளில் ஒருவரை கடத்தச் சொன்னால் யாரை கடத்துவீர்கள்?" என்று கேட்டார். 

அதற்கு விஜய்சேதுபதி பளிச்சென்று சொன்ன பதில் "நயன்தாரா". அதைக் கேட்டு வெட்கத்தால் சிரித்த நயன்தாரா மனதுக்குள் அந்த நிமிடமே இடம் பிடித்து விட்டார் விஜய் சேதுபதி. 

அடுத்த சில மாதங்களுக்குள் அந்த மாயம் நடந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தனுஷ் தயாரிக்கும், ''நானும் ரவுடிதான்'' படத்தில் நயன்தாராவின் ஜோடி விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்கு முன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாரா. தனுஷின் நட்புக்காக உடன் நடிக்கும் நடிகர் யார் என்று கூட கேட்காமல் ஒப்புக் கொண்டார். 

ரவுடி கேரக்டர் ஆனாலும் பார்க்க நல்லவராக தெரியணும் யாரை நடிக்க வைக்கலாம் என்று சிலரை இயக்குருதும் தயாரிப்பாளரும், யோசித்தபோது விஜய்சேதுபதி என்று பளிச்சென்று கருத்து சொன்னார் நயன்தாரா, பீட்சா, சூதுகவ்வும் படங்களில் அவர் நெகட்டிவ் கேரக்டர்தான் பண்ணினார் ஆனால் யாருக்குமே அவர் கோபம் வரவில்லை. என்று அதற்கு விளக்கமும் சொல்ல உடனே டிக் அடிக்கப்பட்டார் விஜய்சேதுபதி.  இப்போது மொத்த படமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

கதைப்படி படத்தின் நாயகி நயன்தாராவுக்கு ஒரு பிரச்னை. அவரை கடத்த ஒரு கும்பல் திட்டமிடுகிறது. தனியயொ பெண்ணால் அவர்களை எதிர்த்து போராட முடியாது. போலீசுக்கு போனால் விஷயம் திசை திரும்பிவிடும். போலீசும் கிரிமினல்களும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று சொல்ல முடியாது. 

மீடியா, செய்தி, பப்ளிசிட்டி என்று வெளியில் தலைகாட்ட முடியாது. இதனால் நண்பர் ஒருவர் உதவியுடன் சென்னையில் இருக்கிற ஒரு டெரரான ரவுடியை தேர்வு செய்கிறார். அவர்தான் விஜய்சேதுபதி. தனக்கான பிரச்சனையை அவரிடம் கூறி தப்பிக்க வைத்தால் இவ்வளவு பணம் தருகிறேன். என்கிறார் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 

நயன்தாராவுக்கு பாதுகாப்பு அரணாகிறார் விஜய்சேதுபதி. செவித்திறன் குறைந்த நயன்தாரா மற்றவர்களின் மவுத் ரீடிங்கை கவனித்து பேசக்கூடியவர். இதனால் ரவுடியாக இருந்த விஜய்சேதுபதி அவர் மீது காதல் கொள்கிறார். கடைசிவரை அவருக்கு காவலாக இருக்க விரும்புகிறார். 

தன் சம்பளமாக அவரையே கேட்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? நயன்தாராவுக்கு என்னதான் பிரச்சினை. விஜய்சேதுபதி உண்மையில் ரவுடிதானா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிளிக்கும் படம்.