Saturday, November 8, 2014

மீண்டும் மருதநாயகம் சாத்தியமா?

கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் என மூன்று படங்களும் அடுத்து அடுத்தாக ரிலீசாக இருக்கின்றன. 

இதில் உத்தமவில்லன் மற்றும் பாபநாசம் படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டன. தற்போது அப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

விஸ்வரூபம் 2 படத்திற்கு இன்னும் சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டும். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய இந்த மூன்று படங்களில் உத்தம வில்லன் படம்தான் முதலில் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் கமல்ஹாசனே கூறியிருக்கிறார்.  

தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது கமலுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவருக்கு ஒரு வருத்தமும் உண்டு. அதுதான்... மருதநாயகம் படம் கிடப்பில் கிடப்பது. 

கமலின் பிறந்தநாளை ஒட்டி அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தன் கனவுப்படமான மருதநாயகம் படம் பற்றி பேசி இருக்கிறார்...,  மருதநாயகம் படத்தின் வேலைகள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். 

இந்தப் படத்தை இப்போது தயாரிக்க நிச்சயமாக 100 கோடி தேவைப்படும். நான் சொல்வது உண்மையிலேயே 100 கோடி. மருதநாயகம் படத் தயாரிப்புக்கு பணம் மட்டும் ஒரு பிரச்சனையல்ல. 

படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க பவர்ஃபுல்லான ஒரு டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் தேவை. 

அதற்கான ஆட்கள் வரவேண்டும். காரணம் இந்தப் படத்தை எடுப்பதாக இருந்தால் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், தமிழ் மொழிகளில் எடுக்க வேண்டும். 

அந்தந்த மொழிகளில் உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய வேண்டும். அதற்கான வசதிகள் அமைந்தால் மருநதநாயகம் படத்தின் வேலைகளை உடனே துவங்குவேன். 

ஏற்கெனவே இப்படத்திற்காக 30 நிமிட காட்சிகளை படம் பிடித்துள்ளேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும்தான் படம் பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் கமல்.