Thursday, November 20, 2014

இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன் - ரஜினி

அரசியலில் இப்போதைக்கு ஈடுபட மாட்டேன் என கோவாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கோவாவில் 45வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் துவங்குகிறது. 

சுமார் 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 300 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. 

இந்நிலையில், இந்தாண்டு இந்திய சினிமா நூற்றாண்டு விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஜினி, தனது மனைவி லதா உடன் கோவா சென்றுள்ளார். 

கோவா சென்ற ரஜினி அங்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு எனக்கு இந்த விருதை கொடுப்பது பெருமையாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் இருக்கிறது என்றார். 

மேலும் நடிகர் அமிதாப் உடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டபோது அதை நான் முடிவு செய்யமுடியாது, அவர் தான் முடிவு செய்யணும், அவர் சரி என்று சொன்னால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றவரிடம், அரசியலில் ஈடுபடுவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்க, இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறினார்.