Monday, September 29, 2014

லிங்கா-வில் ஒரு பாடலில் த்ரிஷா

தமிழில் உள்ள எந்த ஹீரோயினைக் கேட்டாலும் அவர்களுடைய ஆசையாக ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது இன்றைய புதுமுக ஹீரோயின்களின் ஆசையாகவும் இருக்கிறது. 

ஆனால், திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் த்ரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது. கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு' படத்தில் கூட அவர் ஜோடி சேர்ந்து விட்டார். ஆனால், என்னமோ ரஜினிகாந்துடன் மட்டும் அவரால் ஜோடி சேரவே முடியவில்லை.

இதனிடையே 'லிங்கா' படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாட உள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பாடலுக்கு நடனமாட த்ரிஷாவை அழைத்தார்களாம். 

ஆனால், ரஜினியுடன் ஜோடியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரும் த்ரிஷா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். 

இருந்தாலும் த்ரிஷா அப்படி நடிப்பதில் தவறில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள். ஏனென்றால் ரஜினியுடன் ஜோடியாக நடித்த நயன்தாரா கூட அதன் பின் 'குசேலன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்கிறார்கள். 

சிறிய படங்களில் அப்படி ஒரு பாடலுக்கு நடமாடினால்தான் கௌரவக் குறைச்சலாக இருக்கும். ஆனால், ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படங்களில் நடிப்பது சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு கௌரவத்தைத்தான் கொடுக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 

இப்போது முன்னணி நடிகைகள் பலரும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை ஒரு ஃபேஷனாகவே மாற்றிவிட்ட நிலையில், அதெல்லாம் தற்போது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுவதில்லை என்கிறார்கள். 

அதனால், த்ரிஷா விரைவில் அதற்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.