Wednesday, September 17, 2014

ஈகோவில் வெடித்து சிதறிய மெகா டைரக்டர்கள்

மண்வாசனை இயக்குனர் தயாரிக்கும் படமொன்றை இயக்கி வந்தார் அந்த காதல் கோட்டை இயக்குனர். அந்த படத்தில் தனது மகளையே நாயகியாக ஒப்பந்தம் செய்த அவர் அவுட்டோருக்கும் கிளம்பினார். 

ஆனால், மேற்படி இயக்குனர்கள் இருவருக்கும் கதையை படமாக்கும் விசயத்தில் ஏகப்பட்ட அக்கப்போராம். 

ஆளுக்கொரு கருத்தை சொல்ல, இப்போது இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று அவுட்டோரில் இருந்து மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு திரும்பி வந்து விடடாராம் காதல்கோட்டை. 

இதையடுத்து, அவர்களின் கருத்து மோதலை சரிசெய்யும் பேச்சுவார்த்தை சீரியசாக நடந்து கொண்டிருக்கிறது. 

இருப்பினும், தாமரை இலை தண்ணீர் போலத்தான் இரண்டு பேருமே உருண்டு கொண்டிருக்கிறார்களாம்.