Monday, May 26, 2014

இளைத்த ஐஸ்வர்யா ராய் - அசந்து போன புகைப்படக்காரர்கள்

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்து புகைப்படக்காரர்கள் அனைவருமே அசந்து போய்விட்டார்கள். 

பொதுவாக நடிகைகளுக்குத் திருமணமானால் அவர்களது இமேஜ் குறைந்து விடும். அதிலும் குழந்தை வேறு பெற்று விட்டால் கேட்கவே வேண்டாம். ஆனால், இதற்கெல்லாம் விதிவிலக்கானவர் ஐஸ்வர்யா ராய்.

சில நாட்களுக்கு முன் கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்ப்பெட் வரவேற்பில் பங்கேற்க வந்த இளைத்துப் போன ஐஸ்வர்யா ராயை பார்த்து அனைவருமே வியந்து போனார்கள். 

ஒரு குழந்தைக்குத் தாய் என்று சொல்ல முடியாத அளவிற்கு, மிகவும் இளமையுடன் காட்சியளித்த ஐஸ்வர்யா ராயை நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் இடைவிடாது புகைப்படம் எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்.

மீன் வடிவ தோற்றம் கொண்ட அலங்காரமான உடையமைப்பில் தோற்றமளித்த ஐஸ்வர்யா ராயை ஆச்சரியத்துடன் பார்த்து பொறாமைப்பட்டவர்கள் எத்தனை பேரோ? ஐஸ்வர்யா ராய் விரைவில் 'ஜாஸ்பா' என்ற ஹிந்திப் படத்தில் நடிக்கப் போகிறாராம். 

அந்த படத்தில் பல ஸ்டன்ட் காட்சிகளில் வேறு நடிக்கப் போகிறார். அதற்காகவே கடுமையாக உடற்பயிற்சி செய்து பழைய அழகை திரும்பப் பெற்றிருக்கிறார்.

ஐஸ்வர்யாவின் வருகையால் மும்பை ஹீரோயின்களுக்கு இப்போதே கிலி வந்து விட்டது என்கிறார்கள்.