Wednesday, September 23, 2015

புலி படத்துக்கு தடைகோரி வழக்கு

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள புலி படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார், சிபு, பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளனர். 

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகிற அக்டோபர் 1ந் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியைச் சேர்ந் அன்பு ராஜசேகர் என்பவர் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கி, விஜய் நடித்த கத்தி படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

இந்த வழக்கு தஞ்சை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பு செல்வராஜ் மேலும் ஒரு வழக்கு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் "கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் விஜய் நடித்துள்ள புலி படம் வெளிவர உள்ளது. 

விஜய்யும் வழக்கில் உள்ள நிலையில் வரவிருக்கும் புலி படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ஆகியவற்றை வழக்கு முடியும் வரை வெளிவர தடைவிதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார். 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த மனுமீது விளக்கம் அளிக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைத்ததது.