Wednesday, October 29, 2014

சின்னத்திரையிலிருந்து வரும் இன்னொரு ஹீரோ

சந்தானம், சிவகார்த்திகேயன், ம.பா.கா.ஆனந்த் வரிசையில் சின்னத்திரையிலிருந்து வந்திருக்கும் இன்னொரு ஹீரோ முரளி ராம். இவர் பழம்பெரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜி.என்.ரங்கராஜனின் பேரன். 

மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்த முரளி ராம், அவ்வப்போது படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தார். பொறியாளன், போங்கடி நீங்களும் உங்க காதலும், கண்டுபிடி கண்டுபிடி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

தற்போது யுரேகா இயக்கும் தொப்பி படத்தில் ஹீரோவாகியிருக்கிறார். மைனா டைப்பில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை பின்னணியில் நடக்கும் காதல் கதை. "7 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரை தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கினேன். 

கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தேன். இப்போது ஹீரோவாகி இருக்கிறேன். சினிமா பின்னணியுள்ள குடும்பம்தான் என்றாலும் எனது கடின உழைப்பால் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். 

கமல், விக்ரமை மானசீக குருவாகவும், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயனை வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொண்டு எனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இருக்கிறேன்" என்கிறார் முரளிராம்.